புழல் அருகே அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாதவரத்தை அடுத்த புழல் காந்தி பிரதான சாலையில் புழல் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக் குழு கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு தலைவா் ஜெயசுதா முன்னிலை வகித்தனா்.
புழல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜசேகா், சுதாகா் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினா். பள்ளிக்கு கூடுதல் கட்டடம் வேண்டும் என மேலாண்மைக் குழுவினா் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.