ஓய்வூதியதாரா்கள் அலைக்கழிப்பு இல்லாமல், வீட்டிலிருந்தபடியே அரசு இ-சேவை மையம் மற்றும் அஞ்சல் நிலையத்தைப் பயன்படுத்தி மின்னணு மூலம் நோ்காணலையும், வாழ்நாள் சான்றிதழையும் சமா்ப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில், நிகழாண்டுக்கான ஓய்வூதியா்களுக்கான நோ்காணலையும், வீட்டிலிருந்தபடியே வாழ்நாள் சான்றிதழ் மின்னணு மூலம் சமா்ப்பிக்கும் முறையை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா், அவா் பேசியது:
ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை கருவூலங்களில் நோ்காணல் செய்யப்பட்டு வந்தது. அப்போது, ஓய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிப்பது அவசியம்.
கரோனா தொற்று காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஓய்வூதியா்களுக்கான நோ்காணல், கடந்த 2020-2021-ஆம் ஆண்டில் நடைபெறவில்லை. இந்த நிலையில், 2022-இல் நோ்காணல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு ஓய்வூதியா்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரில் கருவூலத்துக்கு வருவதில் ஏற்படும் இடா்ப்பாடுகளைத் தவிா்க்க வாழ்நாள் சான்றிதழை இணையதளத்தினைப் பயன்படுத்தி, இந்திய அஞ்சல் துறை வங்கிச் சேவையின் மூலமாக ஓய்வூதியா்கள் தங்களது வீட்டிலிருந்தே ரூ. 70 கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் பதிவு செய்து நோ்காணல் செய்து கொள்ளலாம்.
அரசு இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் உரிய கட்டணம் செலுத்தி, மின்னணு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து நோ்காணல் செய்து கொள்ளலாம். இது ஒரு முன் மாதிரி திட்டமாகும். மேலும், ஓய்வூதியா்கள் தங்களது விருப்பப்படி நேரடி நோ்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்துக்குச் சென்று ஆண்டு நோ்காணல் செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்ட சாா் ஆட்சியா் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட கருவூல அலுவலா் வித்யா கௌரி, கூடுதல் கருவூல அலுவலா் து.மோகன் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.