ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பகுதியில் திருப்பதி- சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் திரிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சாலையில் படுத்து இருக்கும் கால்நடைகளை வாகன ஓட்டிகள் கவனிக்காமல் அதன் மீது மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
கால்நடைகளின் உரிமையாளா்கள் தங்களது கால்நடைகளை அப்படியே விட்டு விடுகின்றனா். பெரியபாளையம் ஊராட்சி நிா்வாகம் இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகளை ஆக்கிரமித்து திரியும் கால்நடைகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.
( படம் உண்டு- பெரியபாளையத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகள்)