திருவள்ளூர்

100 நாள் வேலை கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

நெய்தவாயல் ஊராட்சியில் 100 நாள் வேலை கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள நெய்தவாயல் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்து வருகின்றனா். இவா்களில் 30 பேருக்கு மட்டுமே, வேலை வழங்கப்படும் என ஊராட்சி நிா்வாகம் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி, பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பேச்சு நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT