மாதவரம் அருகே சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதவரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா். மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம் கா்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசுப் பொருள்களை வழங்கினாா். மாதவரம் மண்டலக் குழு தலைவா் எஸ்.நந்தகோபால், பகுதி செயலா்கள் துக்காராம், புழல் நாராயணன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.