திருவள்ளூர்

அம்பேத்கா் நினைவு தினம்: மாலை அணிவித்து மரியாதை

DIN

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல் அரசியல் கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   
 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் முன்னேற்றச் சங்கங்கள், பிசி, எம்பிசி ஆசிரியர், காப்பாளர் சங்கம் மற்றும் அரசு நலக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், சார் ஆட்சியர் மகாபாரதி, சார் ஆட்சியர் சரண்யா(பயிற்சி), உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ரூபேஷ்குமார், ஆதிதிராவிட நலத் துறை அலுவலர் கலைச்செல்வி, எஸ்.சி, எஸ்.டி. நலச்சங்க தலைவர் ஜெய தென்னரசு, முன்னாள் நகர் மன்ற தலைவர் ராசகுமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில், ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் இ.லஷ்மிகாந்தன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நகர் தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் ஜான் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்தனர்.  
புரட்சி பாரதம் கட்சி சார்பில், ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.வழக்குரைஞர் அணி பிரிவு கே.எம்.ஸ்ரீதர்,   மாவட்டக் தலைவர் ஜி.பன்னீர், மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   
ஆவடியில்... திருமுல்லைவாயலில் அம்பேத்கரின் சிலைக்கு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி  மாநகர திமுக செயலாளர்  சா.மு.நா.ஆசிம்ராஜா, ஆவடி பகுதி செயலாளர்கள் பேபி சேகர், ஜி.ராஜேந்திரன் ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
பூந்தமல்லி புறவழிச்சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பூந்தமல்லி நகரச் செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகர்மன்றத் தலைவர் காஞ்சனா சுதாகர், ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அம்பத்தூரில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
ஆவடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் மரியாதை செலுத்தினார்.  
திருமுல்லைவாயலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் குமணன், ஆவடி தொகுதி செயலாளர் மு.ஆதவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
ஸ்ரீபெரும்புதூரில்... ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு அதிமுக மாவட்ட துணை செயலாளர் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன் தலைமையிலான அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். 
ஒன்றியச் செயலாளர்கள் எறையூர் முனுசாமி, சிங்கிளிப்பாடி ராமச்சந்திரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சேந்தமங்கலம் சார்லஸ், காந்தூர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT