திருவள்ளூர்

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 3-ஆவது நாளாகப் போராட்டம்

DIN

திருவள்ளூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் 3-ஆவது நாளாக திருவள்ளூரில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.லதா முன்னிலை வகித்தார்.

 அப்போது சங்கத்தினர் கூறுகையில், "பல்வேறு இடர்பாடு காலகட்டங்களில் பணி செய்துள்ளோம். அதனால் எங்கள் நிலை கருதி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என்றனர்.

காத்திருப்புப் போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT