வல்லூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டத்தில் உள்ள வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியமும், எரிசக்தி துறையும் இணைந்து அனல்மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த அனல் மின் நிலையத்தில் தலா 500 வீதம் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.