திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 265 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,065-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 172 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,116-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 51 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் மாவட்டடத்தில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,761-ஆக அதிகரித்துள்ளது.