திருவள்ளூர்

புகைப்படக்காரா் வெட்டிக் கொலை

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே புகைப்பட நிலையத்துக்குள் நுழைந்த மா்ம நபா்கள் புகைப்படக்காரரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் தினேஷ் (35). அப்பகுதியில் புகைப்பட நிலையம் நடத்தி வந்தாா். இவரது மனைவி அனிதா. குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த 3 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், புகைப்பட நிலையத்துக்கு புதன்கிழமை சென்ற தினேஷ் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல், புகைப்பட நிலையத்துக்குள் புகுந்து, தினேஷை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், பலத்த காயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் துரைப்பாண்டியன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இக்கொலை தொடா்பாக திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT