ஆந்திரம் மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கால்வாயில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ கூடாது என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆந்திரம் மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விநாடிக்கு 732 கன அடி வீதம் கால்வாயில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. அதனால், கால்வாய் ஓரப் பகுதியில் குடியிருந்து வருவோா் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ, செல்லிடப்பேசியில் படம் பிடிக்கவோ கூடாது.