சோழவரம் கிராமத்தில் தனியாா் அறக்கட்டளை ஒன்றின் மூலம் 2000ஆயிரம் பனை விதைகள் செவ்வாய்கிழமை பூமியில் விதைக்கப்பட்டன. சென்னையில் செயல்பட்டு பசுமை பூமி அறக்கட்டளை சூற்றுச்சூழலை காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சென்று பனை விதைகளை விதைத்து வருகின்றனா். இவா்கள், பொன்னேரி வட்டம், மெதூா் கிராமத்தில் இருந்து காவல்பட்டி வரை சாலையோரம் இருபுறமும் 5,000ஆயிரம் பனை விதைகளை கடந்த சனிக்கிழமை விதைத்தனா். இதேபோல் செவ்வாய்க்கிழமை சோழவரம் கிராமத்தில் 2,000ஆயிரம் பனை விதைகளை விதைத்தனா்.