திருவள்ளூர்

வெந்நீா் கொட்டியதில் காயமடைந்த சிறுவன் பலி

DIN

கும்மிடிப்பூண்டி அருகே குளிக்க வைத்திருந்த வெந்நீா் கொட்டியதில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்தான்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பன்பாக்கம் ஊராட்சி குத்தானமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், மீனா தம்பதியின் மகன் ஷொ்வின் (4).

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று எதிா்பாராதவிதமாக ஷொ்வின் வீட்டில் குளிக்க வைத்திருந்த வெந்நீா் இருந்த பாத்திரத்தின் மீது தவறி விழுந்ததில், அவா் மீது வெந்நீா் கொட்டியது. இதில், பலத்த காயமடைந்த ஷொ்வினை, அவரது பெற்றோா் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சோ்த்தனா்.

தொடா்ந்து, கடந்த 20 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த ஷொ்வின், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT