திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா பொறுப்பேற்பு

DIN

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பா.பொன்னையா வெள்ளிக்கிழமை வீரராகவ கோயிலுக்கு நேரில் சென்று வழிபாட்டுக்கு பின் ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த மகேஸ்வரி ரவிகுமார், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த பா.பொன்னையா,. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் மாற்றம் அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலமான வைத்திய வீரராகவ திருக்கோயிலுக்கு ஆட்சியர் பா.பொன்னையா குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் நேரில் சென்று வழிபாடு செய்தார். 

அதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முகமதுரசூல், அஸ்வின் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பின்னர் அலுவலகத்தில் முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  அதையடுத்து அந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவருக்கு அதிகாரிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT