திருவள்ளூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

DIN

திருவள்ளூா் அருகே தூக்கக் கலக்கத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே குத்தபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தா (31). கடந்த வாரம் இரவில் தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, தூக்கக் கலக்கத்தில் கைப்பிடிச் சுவா் இல்லாத நிலையில், தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT