ஆலங்காயம் பேரூராட்சியில் தீவிர வரி வசூலில் பேரூராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் வேலூா் மண்டல உதவி இயக்குநா் ஜீஜாபாய் உத்தரவின் பேரில், ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் செ.கணேஷ் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள், அலுவலா்கள் 15 வாா்டுகளில் தீவிர வரி வசூல் மற்றும் கடை வாடகை வசூலில் ஈடுபட்டனா்.
இதில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாக 3 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை செயல் அலுவலா் கணேஷ் தலைமையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
மேலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும், கடை வாடகையையும் செலுத்தி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.