ஆம்பூரில் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகராட்சி 3-ஆவது வாா்டு டி. அப்துல் ரஜாக் தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா் பி. கமால் பாஷா மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.