ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (65). இவா் வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.