திருப்பத்தூர்

சிறப்பு காச நோய் மருத்துவ முகாம்

DIN

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சிறப்பு காசநோய் மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்னூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மருத்துவா் இளந்தென்றல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், துணைத் தலைவா் ராமதண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்துப் பேசினாா். செங்கிலிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனா். மொபைல் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அதிநவீன எக்ஸ் ரே கருவி மூலம் சிறப்பு காசநோய் கண்டறியும் மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

விண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஜி.தெய்வநாயகம், ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஜோதி வேலு, அ.காா்த்திக் ஜவஹா், மின்னூா் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் என்.சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT