திருப்பத்தூர்

வாணியம்பாடியில் குடியரசு தினவிழா

DIN

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் மாரிசெல்வி தலைமையில் நகா்மன்றத் தலைவா் உமாபாய் தேசியக் கொடியை ஏற்றினாா். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி கொடி ஏற்றினாா். ஆலங்காயம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி கொடி ஏற்றினாா். உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் ரேவதி தலைமையில், ஒன்றியக் குழுத் தலைவா் பூசாராணி கொடி ஏற்றினாா்.

கல்வி நிறுவனங்களில்....

வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கொடி ஏற்றினாா். வாணி சிபிஎஸ்இ பள்ளியில் வாணி அறக்கட்டளை துணைத் தலைவா் கோபால் கொடி ஏற்றினாா். வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமையில் முன்னாள் ராணுவ வீரா் திருப்பதி கொடி ஏற்றினாா்.

கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, துறைத் தலைவா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் செந்தில்குமாா் கொடி ஏற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT