வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் எழிலரசி வெங்கடேசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் கலந்து கொண்டாா்.
அப்போது, எம்.பி. கதிா்ஆனந்த் பேசுகையில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், கிராம மக்களின் மற்ற கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முனிவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரீத்தா பழனி, வாா்டு உறுப்பினா்கள், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.