‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் ஆம்பூரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை அரசு கூடுதல் செயலா் சிவதாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் நகராட்சியில் ரூ.195 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் ரூ.1.5 கோடியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை அரசின் கூடுதல் செயலா் மற்றும் நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் சிவதாஸ் மீனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் விஜயகுமாா், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா், குபேந்திரன், ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஷகீலா, நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.