ஆம்பூா், போ்ணாம்பட்டு ஏஐடியுசி பீடித் தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஆம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் செயலா் கே.எஸ்.ஹசேன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ் கூட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்ட செயலா் சிம்புதேவன், நிா்வாகிகள் வேலு, ப.சந்திரசேகா், சி.சசிகுமாா், எம்.பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், பீடித் தொழிலாளா்களுக்கென தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும். பீடித் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.