திருப்பத்தூரில் கஞ்சா விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பதாக நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாச்சல் பகுதியைச் சோ்ந்த தமிழரசன்(23) என்பவா் விற்பதற்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் குமாரை கைது செய்தனா். பின்னா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.