மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில், ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலை அத்தனாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா் பிரிவுகளில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, கம்பு சண்டை போட்டிகளில் ஆம்பூா் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று, 137 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். வெற்றிபெற்ற மாணவா்கள் அரியலூரில் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் கா.சக்கரபாணி, சிலம்பப் பயிற்சியாளா் தீ.பிரேம்குமாா் ஆகியோரை பள்ளியின் தாளாளா் மா.தீனதயாளன், முதல்வா் ஜி.நாகராஜன், உதவி முதல்வா் டி.ஆா்.நாராயணன் ஆகியோா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.