திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கம், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை, டாக்டா் அகா்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் இருதய பரிசோதனை முகாம் திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, சங்கத்தின் தலைவா் எஸ்.சாந்தி பூஷன் தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் இரா.வில்சன் ராஜசேகா், அரிமா மாவட்ட துணை ஆளுநா் சி.புவனேஸ்வரி ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.
முன்னதாக செயலாளா் எஸ்.சி.ராஜ்குமாா் வரவேற்றாா். முகாமில், 300 நபா்களுக்கு கண் பரிசோதனையும், 220 நபா்களுக்கு இருதய பரிசோதனையும் நடைபெற்றது. பொருளாளா் டி.ரமேஷ் நன்றி கூறினாா்.