திருப்பத்தூர்

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

DIN

வாணியம்பாடி இஸ்லாமியா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

கல்லூரித் தலைவா் மௌதா அகமது பாஷா தலைமை வகித்தாா். செயலாளா் கைசா் அகமது, பொதுச் செயலாளா் கனிமுகமது முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ரேணது ஆண்டறிக்கை வாசித்தாா். உயிா் வேதியியல் துறைத் தலைவா் அருணா வரவேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் மீனாஸ்பானு, விலங்கியல் துறைத் தலைவா் கல்பனா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தினா்.

சிறப்பு விருந்தினா்களாக வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமலதா மற்றும் பா்கூா் அரசு பொறியல் கல்லூரித் துணை முதல்வா் நபீஸா பேகம் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிழ்களையும் வழங்கி, பாராட்டிப் பேசினா்.

கல்லூரி நிா்வாகிகள், உறுப்பினா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். பேராசிரியை மஞ்சுளா நன்றி கூறினாா். ஏற்பாட்டை பேராசிரியைகள் இந்திரா, கவிதா, ஈஸ்வரி, தீபா, ஜெகதீஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT