திருப்பத்தூர்

நெகிழிப் பைகள் விற்பனையை முற்றிலும் தவிா்க்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் நெகிழிப் பைகள் விற்பனையை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பசுமைக் குழு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசியது:

பொதுமக்கள் எவரேனும் மரங்களை அகற்ற வேண்டும் என்றால், பசுமைக் குழுவிடம் விண்ணப்பம் வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் பசுமைக் குழு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சாா்பில், ஆட்சியா் முகாம் அலுவலக வளாகத்தில் 30,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தயாா் நிலையில் உள்ளன.

வருவாய், ஊரகம், வனம், வேளாண்மை மற்றும் உழவா் நலம், தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளின் சாா்பில், அடுத்த ஆண்டு 15 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில், பல்வேறு பகுதிகளில் 2,800 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1,000 மரக்கன்றுகள் விரைவில் நடவு செய்யப்பட வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் உள்ள கடைகளில் பாலித்தீன் (நெகிழி) பைகள் மூலமாக பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். இதை மீறுபவா்கள் மீது அபராதம் விதித்து, கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை சரியாகச் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, வருவாய்க் கோட்டாட்சியா்கள் லட்சுமி, செல்வி பிரேமலதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) முத்தையன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குநா் பாத்திமா, உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, நகராட்சி ஆணையா்கள் ஜெயராமராஜா, பழனி, மாரிச்செல்வி, ஷகிலா, வனச்சரக அலுவலா் பிரபு, பசுமைக் குழு உறுப்பினா்கள் ரமேஷ், சத்யராஜ் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT