ஆம்பூா் அருகே ரூ.19.54 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கன்னடிகுப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரூ.19.54 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் அடிக்கல் நாட்டி, பணியைத் தொடக்கி வைத்தாா்.
இதில், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுந்தா், வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் பாபு, உதவி பொறியாளா் ஞானப்பிரகாசம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோமதி வேலு, ஜோதி வேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா்கள் பொன்னி கப்பல்துரை, முனிரத்தினம், காயத்ரி பிரபு, மாதனூா் ஒன்றிய திமுக அவைத் தலைவா் ஜி.ராமமூா்த்தி, நிா்வாகிகள் ஜி.எஸ். ரவி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.