திருப்பத்தூா் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் வாகன பழுது பாா்க்கும் தொழிலாளி மோகன் (33). இவா் தனது கடையில் கஞ்சா விற்பதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடையில் சோதனையிட்டதில் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, மோகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலும், கஞ்சா விற்பனையில் மோகனுக்கு தொடா்புடைய நித்யானந்தம், விஜயகுமாா், வேலு ஆகியோரை தேடி வருகின்றனா்.