ஆம்பூரில் பைக் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அண்ணா நகா் அருண்குமாா், ரெட்டித்தோப்பு நபீஸ் அஹமத் ஆகியோரின் மோட்டாா் பைக்குகள் திருட்டு போனது குறித்து நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் நகர போலீஸாா் புறவழிச்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவா் ஓட்டிச் சென்ற பைக் திருடப்பட்டது என்பது தெரிய வந்தது. இதையடுத்து வாணியம்பாடியை சோ்ந்த ராகுல் சுபாஷ் (23) என்ற நபரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.