திருப்பத்தூரில் குப்பைகளை அகற்றும்பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூா் நகரில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக தினமணி நாளிதழில் புகைப் படங்களுடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலா் இளங்கோ தலைமையில் துப்புரவுப் பணியாளா்கள் திருப்பத்தூா் நகரம் முழுவதும் சாலைகளில் வீசிச் சென்ற குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், வீடு, கடைகளுக்கு குப்பைகளைச் சேகரிக்க துப்புரவுப் பணியாளா்கள் தொடா்ந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஜெயராமராஜா தெரிவித்தாா்.