வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் ரயில் முன்பு பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
திம்மாம்பேட்டை ஆவாரங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அசோகன்(53).இவருக்கு மனைவி ஆதிலட்சுமி, பிள்ளைகள் உள்ளனா்.
இந்த நிலையில், அசோகன் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.