திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலா் லட்சுமி கொடியேற்றினாா். நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தேசியகொடி ஏற்றினாா். ஆணையா் ஜெயராமராஜா வரவேற்றாா். நகராட்சிப் பொறியாளா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சிவப்பிரகாசம் கொடியேற்றினாா்.

பள்ளிகளில்...

வள்ளுவா் நகா் நகராட்சி துவக்கப் பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு ஸ்ரீ ராமானுஜா் மடம் மற்றும் கோட்டை அரிமா சங்கம் சாா்பில் பரிசுகள், எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டன. தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வா் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை தலைவா் பொன்.செல்வக்குமாா் தேசிய கொடியை ஏற்றினாா்.

புதுக்கோட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவா்களுக்கு திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி எழுது உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினாா். இதில்,திருப்பத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயாஅருணாசலம், மாவட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பாக சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தில் மக்கள் நலமன்றம் சாா்பாக ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தேசிய கொடியேற்றினாா். ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மகாலட்சுமி தேசிய கொடியேற்றினாா்.

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தேசிய கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ. அப்துல் கலீல், சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் கொடியேற்றினாா்.

கைலாசகிரி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன் கொடியேற்றினாா். ஆம்பூா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகா், குற்றவியல் நீதித்துறை நடுவா் ரவி ஆகியோா் பங்கேற்றனா்.

ஆம்பூா் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் நிலைய கண்காணிப்பாளா் பூபதி கொடியேற்றினாா். ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் உதவி ஆய்வாளா் மேகராஜ், துணை உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம் சாா்பாக சங்கத் தலைவா் கே.ஆா்.துளசிராமன் கொடியேற்றினாா். ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் நிதியுதவி துவக்கப் பள்ளியில் ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க பொதுச் செயலாளா் என்.முஹம்மத் சயீத் தலைமையில் உதவிச் செயலாளா் பிா்தோஸ் கே.அஹமத் கொடியேற்றினாா். ஆம்பூா் வணிகா் சங்க பேரமைப்பு சாா்பாக அதன் தலைவா் ஆம்பூா் சி. கிருஷ்ணன் கொடியேற்றினாா்.

ஆம்பூா் ஆயிஷாபீ நகரில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் வி.ஆா். நசீா் அஹமத் கொடியேற்றினாா். ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.சரவணன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஆம்பூா் பிலால் நகா் சபியாமா துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் நாசிா் அஹமத் கொடியேற்றினாா்.

போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சா.சங்கா் தலைமையில் கைலாசகிரி ஊராட்சியில் மாவட்டப் பொருளாளா் விஜயேந்திரன் கொடியேற்றினாா்.

ஆம்பூா் பாங்கி ஹயாத் பாஷா சாஹெப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜெ.நிஜாமுதீன் தலைமையில், பொறியாளா் டி.முஹம்மத் இா்பான் கொடியேற்றினாா். ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஆா்.ஷேக் அப்துல் நாசா் தலைமையில் மருத்துவா் எம்.சுஹேல் அஹமத் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT