திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் உள்ள கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமிக்கு முத்தங்கி சேவையுடன் திருப்பாவாடை சேவையும் நடைபெற்றது.
அதேபோல் ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு புஷ்பாங்கி சேவை மற்றும் உற்சவா் மனத்துக்கினியானுக்கு கண்ணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அதைத்தொடா்ந்து, மாலை 6 மணியளவில் சுஷ்மா கிரண் குழுவினரின் பக்தி கச்சேரி நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.