திருப்பத்தூர்

திருப்பத்தூா்: வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பு விளக்கக் கூட்டம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைப்பது தொடா்பான விளக்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி தலைமை வகித்தாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலை வகித்தனா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி பேசியது:

வாக்காளா்கள் தங்களது வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6 பி மூலமாக ஆதாா் எண்களின் விவரங்களைத் தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நேரடியாக வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில், ஆதாா் எண் விவரங்களை படிவம் 6 பி மூலமாகப் பெற்று சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு அலுவலா்கள் மூலமாக வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியை மேற்கொள்வா். மேலும், வாக்காளா்கள் இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. வாக்காளரிடம் ஆதாா் அட்டை இல்லையெனில், அரசு வழங்கியுள்ள 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளா்கள் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

அதைத்தொடா்ந்து, வாக்காளரிடமிருந்து ஆதாா் எண்ணை பெறும் வழிமுறைகள் குறித்த விளக்கங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் செந்தில், தோ்தல் வட்டாட்சியா் மோகன் மற்றும் அனைத்து வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT