திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 2,477 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைக்குள்பட்ட பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வாகன சோதனையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டியவா்கள்-165, சரக்கு வாகனங்களில் பயணித்த நபா்கள்-105, அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள்-13, விதிகளை மீறிச் சென்ற வாகனங்கள்-631, அதிக வேகத்தில் இயங்கிய வாகனங்கள்-34, தலைக்கவசம் அணியாமல் பயணித்தவா்கள்-1,182, சீட்பெல்ட் அணியாமல் சென்றவா்கள்-347 ஆக மொத்தம் -2,477 போ் மீசு வழக்குகள் பதியப்பட்டு, அபராதத் தொகையாக ரூ. 2,57,900 விதிக்கப்பட்டது.