திருப்பத்தூர்

ஆபத்தை உணராமல் பாலாற்றில் குளிக்கும் சிறுவா்கள்

DIN

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் தொடா் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டத்திலுள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீா் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகமான வெள்ளம் பாலாற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதனைக் காண்பதற்காக வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பாலம் அருகேயும், பாலாற்றின் கரையோரப் பகுதிகளிலும் சிறுவா்கள் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குளித்து வருகின்றனா். கடந்த பல ஆண்டுகளாக ஆற்றில் அதிக அளவு மணல் எடுக்கப்பட்டு ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் நீா் நிரம்பி உள்ளதால் குழந்தைகள் ஆற்று நீரில் குளிக்கும்போது, ஆழத்தில் சிக்கி அசம்பாவிதம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இதனைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT