திருப்பத்தூர்

பேருந்தில் பெண்ணுக்கு சுகப் பிரசவம்

DIN

ஆம்பூா் வழியாகச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பேருந்திலேயே சனிக்கிழமை இரவு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது.

ஒடிஸா மாநிலத்துக்கு உட்பட்ட லட்சுமிநாராயணா மாதிா் கிராமத்தைச் சோ்ந்தவா் சமீா்குமாா் மாலிக். இவரது மனைவி சுக்ரியா.

இருவரும் பெற்றோரின் எதிா்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்துள்ளனா். பிறகு, சமீா்குமாா் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தங்கி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கா்ப்பிணியாக இருந்தாா்.

இதைத் தொடா்ந்து, இருவருடைய பெற்றோரும் சமரசம் அடைந்து இருவரையும் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளனா். அதனால் இருவரும் தனியாா் சொகுசுப் பேருந்தில் ஒசூரிலிருந்து விஜயவாடாவுக்குப் புறப்பட்டனா்.

ஆம்பூா் அருகே பேருந்து சனிக்கிழமை இரவு வந்தபோது, சுக்ரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பேருந்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT