திருப்பத்தூரில் சனிக்கழமை சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கோடை அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந் நிலையில், சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதையடுத்து, திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான குளிா்ந்த காற்று வீசியது.