வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட550 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடியை அடுத்த அழிஞ்சிக்குளம் பகுதியில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராய தடுப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 11 அட்டைப் பெட்டிகளில் 550 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், திம்மாம்பேட்டை அரசு மதுக் கடையிலிருந்து விற்பனைக்காக வாங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஆட்டோ ஓட்டுநா் ராஜ்மகேஷை கைது செய்து, அம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.