திருப்பத்தூர்

550 மது பாட்டில்கள் கடத்தல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

DIN

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட550 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடியை அடுத்த அழிஞ்சிக்குளம் பகுதியில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராய தடுப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 11 அட்டைப் பெட்டிகளில் 550 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில், திம்மாம்பேட்டை அரசு மதுக் கடையிலிருந்து விற்பனைக்காக வாங்கி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மது பாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், ஆட்டோ ஓட்டுநா் ராஜ்மகேஷை கைது செய்து, அம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT