திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீா் கூட்டத்துக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
வேளாண், காவல், நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சி, வனத் துறை, நிலப்பட்டா குறைகள், பொது நலம் மனுக்கள் என 374 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஆதிதிராவிட நல அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.