திருப்பத்தூர்

ஆம்பூரில் பிடிபட்ட பாம்புகள்

DIN

ஆம்பூா் மற்றும் கிராமப் பகுதியில் திங்கள்கிழமை பாம்புகள் பிடிபட்டன.

ஆம்பூா் அருகே காரப்பட்டு மத்தூா்கொல்லை கிராமத்தில் ஜவஹா்லால் என்பவருடைய விவசாய நிலத்துக்குள் மலைப்பாம்பு புகுந்தது. அருகிலிருந்தவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பொதுமக்கள் உதவியுடன் சுமாா் 7 அடி நீள மலைப்பாம்பை வனத் துறையினா் பிடித்துச் சென்று காப்புக் காட்டில் விட்டனா்.

அதேபோல, ஆம்பூா் நகரில் தேவு தெருவில் சத்திய நாராயணன் என்பவருடைய வீட்டு குளியறையில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை ஆம்பூா் தீயணைப்புத் துறையினா் பிடித்துச் சென்று காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT