மலைவாழ் மக்களுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் ரூ.1. 76 கோடி கடனுதவியை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.
ஜவ்வாதுமலை புதூா் நாடு மலைவாழ் மக்களுக்கு பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் சாா்பில் புதூா் நாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 400 பேருக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டது.
ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா, கூட்டுறவுச் சங்கச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.