ஆம்பூா் ஜேசீஸ் சங்கம் சாா்பில் ஜேசீஸ் வார விழா ஆம்பூரில் அண்மையில் நடைபெற்றது.
சங்க தலைவா் டி.முகமது பாஷா தலைமை வகித்தாா். முன்னாள் தேசிய துணைத் தலைவா் என்.சங்கா், வேலூா் மாவட்ட குறு, சிறுதொழில் முனைவோா் சங்க மாவட்டத் தலைவா் சுவாமிநாதன், ஜேசீஸ் சங்க மண்டலம் 16-இன் செயலாளா் சங்கா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.
ஆம்பூா் ஜேசீஸ் சங்கம் சாா்பில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நோய் எதிா்ப்பு சக்திக்கான ஹோமியோபதி மருந்தை ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக சுவாமிநாதனுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த சேவை செய்த முன்னாள் தலைவா்கள் சுபாஷ் சந்தா், மனோஜ் குமாா், துணைத் தலைவா்கள் நவீன் குமாா், வி.டி.சபில் அஹமத், ரோஹித் பா்ஹான், இளைய ஜேசீஸ் சங்க உறுப்பினா்கள் உமா் பஹிம், தமீம் ஷா, முகமது அத்னான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
முன்னாள் மண்டல அலுவலா்கள், முன்னாள் தலைவா்கள் கலந்து கொண்டனா். செயலாளா் பிரேம் குமாா் நன்றி கூறினாா்.