திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

DIN

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

ஜோலாா்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ஊராட்சி, டி.வீரப்பள்ளி அருகே உள்ள பூசணிக்காய் வட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷின் மகன் கனிஷ் (4), நீதியின் மகன் சுமந்த் (11) ஆகிய இருவரும் வியாழக்கிழமை விவசாய நிலத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, அருகே இருந்த 70 அடி ஆழ கிணற்றின் கனிஷ் தவறி விழுந்தாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா், நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினா் அங்கு சென்று கிணற்றில் கனிஷின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT