ஆம்பூா்: ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜன் என்பவருக்கு சொந்தமான எருமை மாடு தேசிய நெடுஞ்சாலையோரம் புதன்கிழமை புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஒரு காா் அந்த மாட்டின் மீது மோதியது.
இந்த விபத்தில், மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.