கொடைக்கல் கிராம விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் பஞ்சகவ்யம் தயாரித்தல், பயன்படுத்தும் முறை குறித்து திங்கள்கிழமை செய்முறை விளக்கம் அளித்தனா்.
கலவை அருகே உள்ள ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்கள் சே.தினேஷ், ஜெ.பிரகாஷ், த.பிரசாத், ர.ராகுல், ஆ.காா்த்திக் ராஜா, ம.மணிஷ் ஆனந்த் ஆகியோா் கிராமத்தில் தங்கி சேவை புரியும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக சோளிங்கா் வட்டம், கொடைக்கல் கிராமத்தில் விவசாயிகள், கிராம பெண்களுக்கு பஞ்சகவ்யம் மற்றும் தசக்கவ்யம் தயாரித்தல், பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சியை அளித்தனா்.