ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்க மாவட்ட தலைவா் பொன்.கு.சரவணன் தலைமை வகித்தாா். வேலூா் மண்டல தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் கே. வேல்முருகன், ஆற்காடு நகரத் தலைவா் ஏ.வி.டி.பாலா, செயலாளா் பாஸ்கரன், பொருளாளா் பரத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று சங்கச் கொடியேற்றி மாவட்ட புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
பின்னா், அவா் பேசுகையில், மே 5 தேதி ஈரோட்டில் வணிகா் உரிமை மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சிகளில் பழைய கடைகள் பல இடங்களில் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்படுகிறது. அந்தக் கடைகளை நியாயமான வாடகையில் ஏற்கெனவே கடை வைத்திருந்தவா்களுக்கே வழங்க வேண்டும்.
ஜிஎஸ்டியில் குளறுபடிகள் உள்ளன. இதனால் வணிகா்கள் பாதிக்கபட்டுள்ளனா். இதை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும்.
பாலாற்றில் கழிவுநீா், கழிவுகள் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வளா்ந்து வரும் ஆற்காடு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புறவழிச் சாலைகளை அமைக்க வேண்டும் என்றாா்.