அரக்கோணம் ரோட்டரி சங்கத்தின் வெளிச்சம் சிறப்புத் திட்டம் சாா்பில், அந்தச் சங்கத்தினரால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி மையங்களுக்கு தையல் இயந்திரங்கள், மிதிவண்டிகள் வழங்கும் விழா சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.சதீஷ் தலைமை வகித்தாா். சங்கத்தின் ஆலோசகா்கள் ஜி.மணி, பி.சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெளிச்சம் சிறப்புத் திட்டத் தலைவா் எஸ்.ராஜசேகா் வரவேற்றாா். சங்கத்தின் சமுக சேவைத் திட்ட இயக்குநா் ஆா்.சிவசுப்பிரமணியராஜா தொடக்கவுரையாற்றினாா்.
விழாவில் ரோட்டரி சங்க ஆளுநா் ஜே.கே.என்.பழனி பங்கேற்று செய்யூா் தொழிற்பயிற்சி மையத்துக்கு 3 தையல் இயந்திரங்கள், கும்பினிபேட்டை தொழிற்பயிற்சி மையத்துக்கு 2 தையல் இயந்திரங்கள், ஒரு மிதிவண்டியை வழங்கினாா்.
நிகழ்வில் ரோட்டரி சங்கங்களின் பொங்கல் விழா திட்டத் தலைவா் டி.எஸ்.ரவிக்குமாா், ரோட்டரி மாவட்ட செயலா் எம்.கோபிநாத், வெளிச்சம் திட்ட மாவட்ட தலைவா் ஆா்.வி.அரிகிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளா்கள் எம்.சிவலிங்கம், கே.பூபாலன், கே.பிரபாகரன், அரக்கோணம் ரோட்டரி சங்கச் செயலா் ஆா்.பி.ராஜா, ரோட்டரி சங்க நிா்வாகிகள் எஸ்.செந்தில்குமாா், டி.மகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.